Friday, May 28, 2010

தாள்தொழாய் நெஞ்சமே --1

(இப்பாடலின் அமைப்பு: சமஸ்கிருதத்தில் 'ஸ்ரக்விணீ' என்னும் அமைப்பு.
அடிக்கு 4 முறை 'குரு-லகு-குரு' வந்து 4 அடிகளால் ஆவது.


சம்பந்தர் தேவாரம் - 3.35.7 - "கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்"
சிவசிவாவிற்கு என் நன்றி!)


சூளையில் வெந்துழல் துன்பமே சூழினும்
தாளதில் சிந்தையாய்த் தானறும் தன்மையர்
கேளவர் நாவினுக் கின்புசெய் பேரினான்
காளகண் டன்கழல் கைதொழாய் நெஞ்சமே!

நாவினுக் கின்புசெய் பேரினான்= நாவினுக்குச் சொல்ல(ச் சொல்ல) இன்பம் தரும் பேரை உடையவன்.

No comments: