Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

Friday, November 14, 2008

பாடல்

கண்ணில் தெரியும் கனவில் தெளிவுறும்
எண்ணம் வெளிப்பட ஏதுசெய்தீர்?--எண்ணும்
கருத்தினில் ஓங்கிக் கதிரொளி வீச்சாய்
திருத்திகழ் பாடல்செய் தேன்.

Thursday, August 7, 2008

அன்பே நிறைவு..!

-------

ஓடுகிறோம் ஆடுகிறோம் உண்டயர்ந்து தூங்குகின்றோம்
வாடுகிற வாழ்வில் வருவதென்ன?--தேடியிங்குக்
கூடுமுயர் நன்மைபெறக் கும்பிடுவோம் தெய்வத்தை
நீடுலகில் அன்பே நிறைவு.

Monday, August 4, 2008

சிவன் , முருகன் துதி...!


சிவன் துதி
-----------
செஞ்சடையில் பிஞ்சுமதி சேர்ந்திலங்கும் கங்கைநதி!
அஞ்செழுத்தைச் சிந்தித்தல் ஆனந்தம்!--கொஞ்சுமெழில்
மஞ்சுதவழ் மன்னிமய மங்கையொரு பாகத்தன்
கஞ்சமலர்த் தாளிணையே காப்பு.
---------------

முருகன் துதி
--------------
செந்தமிழின் சந்தங்கள் சிந்துக்கள் விந்தைகள்!
கந்தனின் காவடிபோல் கண்ணிமைக்கும்--சந்நிதியில்
சிந்தைமகிழ் சுந்தரனை செந்தில்வேல் சண்முகனை
வந்திப்போம் நெஞ்சமதில் வைத்து.