Showing posts with label மனமே நீவாழி. Show all posts
Showing posts with label மனமே நீவாழி. Show all posts

Monday, December 1, 2008

மனமே! வாழி!

கடலாய் வானாய் தோணியுமாய்
...காற்றாய் கடுகிச் செல்லுவதாய்
படமாய்ப் பசுமை காட்சிகளைப்
...பற்றிப் படரும் நினைவுகளாய்
தடமாய் நெறியைக் காட்டுகின்ற
...தகவாய் விளங்கும் உள்ளுணர்வாய்
புடமாய்ச் சுடரும் பொன்னிகர்த்த
...புரையில் மனமே நீவாழி!