Showing posts with label நிமலனே. Show all posts
Showing posts with label நிமலனே. Show all posts

Sunday, November 29, 2009

நிமலனே ! உனைப் பாடுவேன் !

[புளிமா கூவிளம் புளிமா கூவிளம்
...புளிமா கூவிளம் புளிமா கருவிளம்]
(1-௫ மோனை)


முனைந்த வேதமும் விளங்க ஓதியும்
..முயன்று தேடியும் அறிந்தி டாதெம திறைவனே!
புனைந்த பூமலர் சுகந்த மேவிடப்
..பொலிந்த மாலையை அணிந்து காணுமென் தலைவனே!
வனைந்த ஊனிதைத் தொடர்ந்த ஊழ்வினை
..வருத்தி வாட்டுமென் றிரங்கி யாளுமெம் நிமலனே!
நினைந்த போதிலும் உணர்ந்த போதிலும்
..நிறைந்த வாறுளம் நெகிழ்ந்து பாடிட விழைவனே!

முனைதல்=முற்படுதல் , முனைந்த வேதமும்=முற்படும் வேதமும்
வனைந்த=உருவாகிய