Thursday, March 7, 2013

நஞ்சனகூடு - 1

 நஞ்சனகூடு - 2 (நஞ்சனகூடு - Nanjangud - மைசூர்க்கு அருகுள்ள
'கலித்துறை-- மா கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்' - வாய்பாடு.
'
தான தானன தானன தானன தானன'. அடி ஈற்றுச் சீரைத் தவிர ஏனைய சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.)
(
சம்பந்தர் தேவாரம் - 2.9.1 -
"
களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்")
--------------------------------------------------------------------------------

பாத கம்செயும் ஊழ்வினை பாற்படு துன்பெனும்
ஏதம் நீங்குமொர் உய்வுற எய்திடு நெஞ்சமே
போதன் ஆலடி நீழலில் புண்ணிய னாயருள்
நாதன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே....1

எய்தல்=அடைதல்
ஏதம்=கேடு.

என்பு மாலையன் ஏறமர் நாயகன்  பூங்கழல்
அன்பி .னால்தொழு(து)  ஆட்பட அண்டிடு நெஞ்சமே
நன்பதி யானவன் நாடுவர் நைவினை  தீர்த்தருள்
நம்பன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.... 2

சிக்க லாக்கிடும் தீவினை யால்தொடர் துன்பற
சொக்கன் சேவடிச் சீருரைத் தேகிடு நெஞ்சமே
இக்கு வில்லினை ஏந்துவேள் தீப்படச் செய்தவன்
நக்கன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....3

புயலென் றேவரும் புன்வினை தாங்கிடச் செய்திடும்
தயைநி திக்கழல் சார்ந்துய சென்றடை நெஞ்சமே
பெயலெ .னப்பொழி பெற்றியன் முப்புரம் நீறுசெய்
நயனன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....4

தொல்லை செய்வினைத் துன்பறச் சோதியன் பேரினைச்
சொல்லி அன்பரும் சூழ்ந்திடச் சென்றடை நெஞ்சமே
தில்லை அம்பலச் சிற்பரன் ஏழையர்க் கருள்செய்
நல்லன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....5





 

No comments: