Wednesday, December 5, 2012

திருக்கானூர் --4

காலக் கணக்குத் தவறாமல்
....காலன் வந்து நிற்குமுன்னே
மூலப் பொருளாம் முன்னவனின்
....முடி,தாள்  போற்றி அடைநெஞ்சே
சீலச் சுடராய்த் திகழ்கிறவன்
....தேடி அருளைத் தந்திடுவான்
கோலப் பிறையன் உறைகோவில்
....கொள்ளி  டஞ்சூழ் கானூரே....7

தொடுக்கும் போராய் பிணிவாட்டும்
....துன்பை எண்ணிக் கலங்காமல்
உடுக்கை ஒலியில் நடமாடும்
....ஒருவன் போற்றி அடைநெஞ்சே
எடுக்கும் பிறவிக் கடல்தாண்ட
....இணையில் அருளை வரமாகக்
கொடுக்கும் பெருமான் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....8

No comments: