Friday, November 16, 2012

மழபாடி வயிரத் தூண்-- 4

அரவுநெளி  மேனியினில் அழகு சேரும்
...அலங்கலென கொன்றைமலர் அணிகின் றானை
விரவிடுமென் மணத்தூபம் மேவு வானை
....விடையூரும் திருஇலகும் வெண்ணீற் றானை
இரவலுடல் தனிலுயிர்க்குள் இருக்கும் தேசை
...இறைஞ்சிடுவார் தமதன்புக் கிரங்கு வானை
வரமருளும் மழபாடி வயிரத் தூணை
,,,வாயார வாழ்த்தவினை மாயும் தானே. ...7

மண்டுமிசை  வாசகத்தேன் வழுத்தும் கோவை
...வற்றாத அருள்வழங்கும்  வள்ளல் தன்னை
வெண்டிரைமீ தெழுவிடத்தை விழுங்கி னானை
...விண்ணோர்கள் தொழுதேத்தும் விமலன் தன்னை
தண்டலைசூழ் மயிலாடச் சாரல் காற்றுத்
...தவழ்மணம்சேர் தேன்மலரில் தங்கி யுண்ணும்
வண்டுமுரல் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....8


No comments: