Friday, May 6, 2011

நாடகனுக்குத்தோடகம்!

விதியோ வினையோ வெருவா திருநீ
நிதியா யருளே நிமலன் தருவான்
சதிராய் நடமே தகவாய்ப் புரியும்
கதிதாள் துதியில் கரைவாய் மனமே...6

மருவில் மதியன் மணிசேர் மிடறன்
பொருதீ வினையை பொடிசெய் திடுவான்
தருஆல் நிழலில் தவமே புரியும்
குருதா ளினையே குறிநீ மனமே...7

பொறியில் படுமைம் புலனும் அடையும்
வறிதாம் மடமே வழுவாய் மலியும்
நெறிசேர் வழியே நிமலன் அருளே
அறிவாய் மனமே அணியார் பதமே...8

வறிது= அறியாமை.

தலைமேல் அரவும் தவழும் நிலவும்
அலைபாய் நதியும் அழகாய் மிளிரும்
மலைமேல் நடமே வகையாய்ப் புரிவான்
நிலைபேர் அருளே நினைநீ மனமே...9

ஒருதத் துவமும் உரையார் எனினும்
உருகிக் கனியும் உளமே குடிலாம்
மிருகத் ததளே விழையும் உடையான்
அருளைத் தருதாள் அடைநீ மனமே...10.

No comments: