Monday, August 23, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!--2

சுற்ற மென்றும் சொந்த மென்றும்
...சூழும் பந்தம் காடு மட்டும்
நற்ற வன் தாள் பற்றிக் கொண்டால்
...நன்மை என்றும் வந்து சேரும்
பெற்றம் ஏறும் பெம்மான் போற்றின்
...பேறாம் உய்வை அருளும் அன்பில்
உற்ற புகல்தந் தாளும் ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

No comments: