Monday, December 15, 2008

மார்கழி தரிசனம்!

குளிர்பனி விடியலில் இறைவனின்
..கொலுவினை அடியவர் பரவுவர்!
தளிர்விரல் சிறுமியர் கவினுறத்
..தரையினில் கோலமும் இடுவரே!
ஒளிமலர் பூக்களும் இடைஇடை
..உயர்ந்தநல் திருவினை அளித்திடும்!
களியினில் பிறந்திடும் பரவசம்!
..கண்கவர் மார்கழி தரிசனம்!

No comments: