Thursday, March 19, 2009

எழில்வேலன்

எனதுயிர் தெய்வம் செவ்வேள் எழில்வேலன் என்றே
...இளமஞ்ஞை மீது வருவாய்!
மனதிருள் நீக்கும் தேசாய் வினையாவும் வேலால்
...விரைவாகப் போக்கி அருள்வாய்!
கனவெனும் வாழ்வைக் கண்டு கலங்காத சித்தம்
...கனிவான பக்தி தருவாய்!
நினதிரு பாதம் போற்றி நெறியாகக் கூட்டும்
...நிறைஞான வாழ்வை விழைந்தேன்!

Sunday, March 15, 2009

கலிவிருத்தம்

கருமணியி லொளிருமொளி கருணைபொழிவிழியே!
திருவருளி லுலகுதரும் திகழபய கரமே!
பொருவினையு பொடியெனுமுன் புகலளிசெங் கழலே!
சுருதிமறை தொழுதிடுமுன் துணையடியென் கதியே!

கலிவிருத்தம்

கலிவிருத்தம்
¸ÕÁ½¢Â¢ ¦Ä¡Ç¢Õ¦Á¡Ç¢ ¸Õ¨½¦À¡Æ¢ ŢƢ§Â!
¾¢ÕÅÕÇ¢ ÖÄ̾Õõ ¾¢¸ÆÀ ¸Ã§Á!
¦À¡ÕÅ¢¨ÉÔ ¦À¡Ê¦ÂÛÓý Ò¸ÄÇ¢¦ºí ¸Æ§Ä!
ÍÕ¾¢Á¨È ¦¾¡Ø¾¢ÎÓý Ш½ÂʦÂý ¸¾¢§Â!

Tuesday, March 10, 2009

வனம்!

கருவிளம் புளிமாங்காய் கருவிளம் புளிமாங்காய்
கருவிளம் புளிமாங்கனி

தனதனந் தனதான தனதனந் தனதான
தனதனந் தனதானனா


சதாக்கிர அறுசீர் விருத்தம்
(அடிக்கு 25 எழுத்து, 100 எழுத்து (சதாக்கிரப் பாடல்)

கழைநுழைந் திடுகாலு மினிதெனுஞ் சுவைகூட
..கலைமிகுந் திசையானதே

மழைவருங் குறிகாண மயிலினங் களதாட
..வனமதுங் கவினானதே

புழையறிந் திடயேலா நிழல்மிகுந் ததர்தோன்றும்
..புலமிதென் றறியாமலே

தழைபுனைந் தடர்காவும் அடல்மிகுந் திடுமாவும்
..தருவனந் தகவானதே!

கால் = காற்று, புழை = காட்டுவழி, புலம் = திக்கு, மா = விலங்கு, அதர் = வழி

Tuesday, March 3, 2009

அருளாயோ!

தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த...தன தான


குழைக ளாட முடிது லங்கு
..குளிர தான நிலவு கங்கை
..குலவ மேனி யிலகு கொன்றை...மலராட

உழுவை ஈரு ரியைய ணிந்து
..உரக மானு முடனி லங்க
..உமையை வாம மிடம ணிந்த... மறையோனே!

முழவி நோடு துடிமு ழங்க
..முடிவி லாத நடமி தென்று
..முதிரு மோன நிலைவி ளங்க...வருவாயே!

விழையு ஞான நிலைது லங்க
..விமல நாகி மருளு கின்ற
..வினையு மோட அபய மொன்றை...அருளாயோ!

தானத்..தனதான

நேசத்..துணையாம்வெண்
..ணீறைப்..புனைவோராய்ப்
பேசற்..கினியானைப்
..பேசித்..துதிபாடிப்
பூசித்..துணர்வாரின்
..போதப்..பொருளானை
ஓசைக்..கழலானை
..ஓதிப்..பணிவோமே!

Friday, February 20, 2009

முடுகியல் பாடல்!

பெருமைவளர் முருகுதவழ் பெருநிதியம் கிருதிவழி
உருகிமகள் பரதமிடும் ஒருநடமும் பெருகிவரும்
துரிதகதி சரஒலியும் சுரலயமும் இயம்புதலில்
திருநிறையும் குருவருளும் தெருளுறவும் தருமுயர்வே!

Tuesday, February 17, 2009

சக்தி துதி!

மாங்காடு கோயிலுறை மங்கலத்தாய் காமாட்சி
தீங்(கு)ஓட நன்றுசெய்யும் தெய்வமவள்!-- பாங்கான
பூங்காவின் பூமணமாய்ப் பூக்கின்ற சக்தியவள்
ஓங்காரி உத்தமியென்(று) ஓது.

Friday, February 6, 2009

வெண்ணிலவே!



(அரையடி-- மா காய் காய்)

> வெள்ளித் தகடெனவே விண்வெளியில்
> ...மிளிரும் வடிவழகே! வெண்ணிலவே!
> கொள்ளை இளமையுடன் கூடிடுவாய்!
> ...கோடி யுகங்களிலும் தோன்றிடுவாய்!
> துள்ளும் சிறுவயதில் சொந்தமடி!
> ...துணையாய் முதுமையிலும் வந்திடுவாய்!
> உள்ளம் களித்திருப்பேன் நீவருவாய்!
> ...உருவில் குறைந்துவளர் வெண்ணிலவே!

> அன்புடன்,
> தங்கமணி.

Monday, February 2, 2009

அம்மானை

அம்மானை

ஏறுமயில் வாகனனார் ஏறுகந்தார் தம்குருவாம்
மாறுபடு கோல மலையர்காண் அம்மானை
மாறுபடு கோல மலையரே ஆமாகின்
வேறுபடு கோலத்தின் மேன்மையென்ன அம்மானை?
ஆறுதலை கொண்ட அருளாளர் அம்மானை