Thursday, October 7, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--4

இமிழ்த்திடு கழல்களின் எழில்நடம்
தமிழ்த்திரு மறைகளும் சாற்றுமுன்
உமித்துணை நினைவிலேன்; உற்றவா
கமித்தருள் கச்சியே கம்பனே....7.

இமிழ்த்தல்=ஒலித்தல்.
உமி=நெல்லின் உமி(சிறிதளவு என்னும் பொருளில்)

சிரத்துடை பிறையனே!திரியுமுப்
புரத்தையும் எரிசெயும் புண்ணியா!
துரத்திடும் தொல்வினை தொலைத்தருள்
கரத்தினாய் கச்சியே கம்பனே!...8.

1 comment:

Thangamani said...

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,
மிக்க நன்றி.

அன்புடன்,
தங்கமணி.